40 வயது ஆகிடுச்சு… இன்னும் சாக்லேட் பாயாக இருக்க முடியாது – துல்கர் சல்மான் கருத்து!

திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (08:07 IST)
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் நடித்து அனைத்து மொழிகளிலும் பரீட்சியமான நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் உருவான சீதாராமம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தெலுங்கில் உருவான இந்த திரைப்படம் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெற்றி பெற்றது.

இதையடுத்து துல்கர் சல்மானின் அடுத்தடுத்த படங்கள் மீது எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அந்த வகையில் அவர் நடிப்பில் இப்போது உருவாகியுள்ள கிங் ஆஃப் கோதா படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படம் ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ளது. பேன் இந்தியா ரிலீஸாக ஆகஸ்ட் 25 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் ஆக்‌ஷன் படத்தில் நடித்திருப்பது குறித்து பேசியுள்ள அவர் “எனக்கு இப்போது 40 வயது ஆகிவிட்டது. இன்னமும் ரொமாண்டிக் ஹீரோவாக தொடரமுடியாது. நான் இப்போது முதிர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க நினைக்கிறேன். அப்படி ஒரு ஆக்‌ஷன் கதாபாத்திரத்தில் கிங் ஆஃப் கோதாவில் நடித்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்