மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா கடந்த ஞாயிறு அன்று வருகை தந்த நிலையில், விதிகளை மீறி தடை செய்யப்பட்ட இடத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாகூர் குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா, மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த நிலையில், அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாகூர் தனது எக்ஸ் (X) பதிவில் கூறியிருப்பதாவது:
"நீங்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தந்தது நல்ல விஷயம் தான். ஆனால் ஏன் விதிகளை மீற வேண்டும்? தாமரைக் குளம் பகுதியை தவிர, உள்ளே மொபைல்கள் மற்றும் கேமராக்கள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால் நீங்கள் உள்ளே உள்ள இடத்தில் புகைப்படம் எடுத்துள்ளீர்கள்.