பன்முகக் கலைஞர் கங்கை அமரனின் மனைவி காலமானார்!

திங்கள், 10 மே 2021 (08:03 IST)
தமிழ் சினிமாவின் மூத்த கலைஞர்களில் ஒருவரான கங்கை அமரனின் மனைவி இயற்கை எய்தியுள்ளார்.

இயக்குனர் கங்கை அமரனின் மனைவி மணிமேகலை நேற்று இரவு 11.30 மணிக்கு உடல்நல பிரச்சனைகள் காரணமாக இயற்கை எய்தியுள்ளார். இளையராஜாவின் தம்பியும் தமிழ் திரையில் பன்முகத்திறமை கொண்ட கலைஞராக விளங்கிய கங்கை அமரன் மணிமேகலை தம்பதிகளுக்கு வெங்கட்பிரபு(இயக்குனர் மற்றும் நடிகர்), பிரேம்ஜி அமரன் (நடிகர் மற்றும் இசையமைப்பாளர்) என்று இரண்டு மகன்கள் உள்ளன. சமீபகாலமாக உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த மணிமேகலை சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு வயது 69.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்