நயன்தாராவையும் த்ரிஷாவையும் ஏன் இந்த பாடு படுத்துறாங்க!

திங்கள், 24 ஏப்ரல் 2017 (21:36 IST)
ஜி.வி.பிரகாஷ், கயல் ஆனந்தி நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய கில்மா படம் 'த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா. எந்தவித சமூக அக்கறையும் இல்லாமல் பெண்களை கிண்டல் செய்வது, இரட்டை அர்த்த வசனங்கள் ஆகியவை மட்டுமே இந்த படத்தில் இருந்தது. ஆனாலும் இந்த படம் வெற்றி பெற்று தயாரிப்பாளரின் கல்லாவை நிரப்பியது. மேலும் இந்த படம் வெளியான பின்தான் தெரிந்தது படத்துக்கும் திரிஷா, நயன்தாராவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று.



 


இந்த நிலையில் 'த்ரிஷா இருக்கும்போதே நயன்தாரா' என்று ஒரு புதிய படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதுவும் ஒரு கில்மா படமா இல்லையா? என்பது தெரியவில்லை, ஆனால் கண்டிப்பாக இந்த படத்திலும் த்ரிஷாவுக்கும் நயன்தாராவுக்கும் நிச்சயம் சம்பந்தம் இருக்காது என்பதை உறுதியாக சொல்லலாம்

முன்பெல்லாம் படத்தின் டைட்டில் என்பது கண்ணியமாக வைக்கப்பட்டது. அதன் பின்னர் ஹீரோக்களின் கேரக்டர்களின் பெயர்களில் படங்கள் வெளியாது. தற்போது என்ன டைட்டில்தான் வைக்க வேண்டும் என்ற விவஸ்தையே இல்லாமல் டைட்டில் வைக்கப்படுகிறது. இப்படியே போனால் இது எங்கே போய் முடியுமோ? என்பதுதான் அனைவரின் கவலை.

வெப்துனியாவைப் படிக்கவும்