மதுரைக்கு ஷூட்டிங் வரும் பாலிவுட் பட்டாளம்: தனுஷின் புதிய பட அப்டேட்!

திங்கள், 27 ஜூலை 2020 (12:21 IST)
நடிகர் தனுஷ் நடித்து உருவாகி வரும் இந்தி படத்தின் படப்பிடிப்பு மதுரையில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் நடித்து இந்தியில் 2013ல் வெளியான படம் ராஞ்சனா. தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியான இந்த படம் தனுஷின் முதல் இந்தி திரைப்படமாகும். இந்த படத்தை ஆனந்த எல் ராய் இயக்க ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். தற்போது இதே கூட்டணியில் மற்றுமொரு படம் உருவாகி வருகிறது.

”அத்ரங்கி ரே” என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் தனுஷ் மற்றும் அக்‌ஷய்குமார் ஆகியோர் ஹீரோக்களாக நடிக்க ஆனந்த எல் ராய்தான் இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சாரா அலி கான் நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் முன்னரே தொடங்கியிருந்த நிலையில் கொரோன பாதிப்பால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது படப்பிடிப்பு பணிகள் மெல்ல தொடங்கி வரும் நிலையில், அக்டோபர் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகளை தொடங்க உள்ளனர். இந்த படத்தில் தனுஷ் தமிழகத்தை சேர்ந்த இளைஞனாகவே நடித்துள்ளார். இதில் சில காட்சிகளை மதுரையில் படம்பிடிக்க உள்ளார்கள். இதனால் அக்டோபரில் பாலிவுட் குழுவினர் மதுரையில் படப்பிடிப்புகளை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்