தனுஷின் கர்ணன் படம் குறித்த முக்கிய அப்டேட்: பரபரப்பு தகவல்

திங்கள், 27 ஜூலை 2020 (07:54 IST)
தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக்கிய கர்ணன் திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் ஒருசில காட்சிகள் மட்டுமே படப்பிடிப்பு உள்ளதாகவும் லாக்டவுன் முடிந்தவுடன் அந்த படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் சற்று முன்னர் இயக்குனர் மாரி செல்வராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் தனுஷின் 37 வது படமான கர்ணன் குறித்து ஒரு முக்கிய அப்டேட்டை அறிவித்துள்ளார். இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வரும் 28ம் தேதி வெளியிடஉள்ளதாகவும் டைட்டில் போஸ்டருடன் ஒரு ஆச்சரிய அறிவிப்பும் அதனுடன் வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து தனுஷ் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்
 
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரித்துள்ளார். 
 
மேலும் தனுஷ் நடித்து முடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் இந்த படம் விரைவில் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்