எனக்கா அடுத்து என்ன கதை வெச்சிருக்கீங்க வெற்றிமாறன்? – தனுஷ் நெகிழ்ச்சி அறிக்கை!

செவ்வாய், 23 மார்ச் 2021 (11:04 IST)
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்திற்காக தேசிய விருது பெற்றுள்ள தனுஷ், வெற்றிமாறன் குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் நான்காவதாக வெளியான படம் அசுரன். வசூல்ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியடைந்தது இந்த படம். இந்நிலையில் தற்போது இந்த படத்தில் நடித்ததற்காக நடிகர் தனுஷிற்கு மிக சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து ஓம் நமசிவாய என குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் தனுஷ். அதில் அவர் “சிவசாமி கதாப்பாத்திரத்தை எனக்கு அளித்ததற்கு நன்றி வெற்றிமாறன். இயக்குனர் பாலு மகேந்திரா அலுவலகத்தில் உங்களை சந்தித்தபோது உண்டான நட்பு. தற்போதுவரை நான்கு படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளோம். இரண்டு படங்கள் இணைந்து தயாரித்துள்ளோம். என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. எனக்காக அடுத்த என்ன கதை வைத்துள்ளீர்கள் என ஆவலாக காத்திருக்கிறேன்” என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்