குபேரா படத்துக்காக 10 மணிநேரம் படத்துக்காக ரிஸ்க் எடுத்து நடித்த தனுஷ்!

vinoth

செவ்வாய், 7 மே 2024 (08:41 IST)
நடிகர் தனுஷ் நடித்த  முதல் நேரடி தெலுங்குப் படமான ’வாத்தி’ திரைப்படம் சில மாதங்களுக்கு முன்னர் ரிலீஸாகி கவனம் பெற்றது. இந்நிலையில் தனுஷ் ஏற்கனவே ஒப்பந்தமான தெலுங்கு படத்தில் இயக்குனர் சேகர் கமுலா தற்போது நடித்து வருகிறார். குபேரா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது.

இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகார்ஜுனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் கதை 40 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு அரசியல் கதையாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் மற்றும் திருப்பதியில் நடந்தன. இதையடுத்து ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு இப்போது மும்பை தாராவி பகுதிகளில் குபேரா படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் மும்பையில் ஒரு குப்பைக் கிடங்கில் படமாக்கப்பட்ட நிலையில் காட்சி தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக 10 மணிநேரமும் அந்த குப்பை கிடங்கிலேயே நின்று தனுஷ் நடித்துக் கொடுத்தாராம். படம் வெளியாகும் போது இந்த காட்சி பேசுபொருளாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்