கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இசையமைப்பாளர்

வெள்ளி, 19 மார்ச் 2021 (18:38 IST)
கடந்த வருடம் மார்ச் மாதம் முழுவதும் கொரோனா பரவல் தீவிரம் அடைந்தது. இதையடுத்து, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் ஓரளவு கொரோனா வைரஸ் குறைந்துவந்த நிலையில் கொரோனா வைரஸ் இரண்டாம் கட்டபரவல் அதிகரித்துவருகிறது.

இதைத்தடுப்பதற்கான கோவேசின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பு மருந்துகள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. இது பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவில் தற்போது அதிகரித்துவரும் கொரோனாவிருந்து தற்காத்துக் கொள்ள இதைத்தடுப்பதற்கான கோவேசின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசியை அரசியல்தலைவர்கள்,சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீர்ர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் போட்டுவருகின்றனர்.

அந்தவகையில், தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், இன்று கோவேசின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்