ஷுட்டிங்கில் கொரோனா.... கட்சி வேலை...ரஜினி சென்னை திரும்புவது எப்போது???

வியாழன், 24 டிசம்பர் 2020 (20:17 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பில் இருந்தார் என்பதும் இந்த படப்பிடிப்பு குழுவினர்களில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு அவர் ஐதராபாத்தில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் நாளை மறுநாள்(26 ஆம் தேதி) சென்னை திரும்புவார் எனத் தெரிகிறது.

 இந்த நடிகர் ரஜினிகாந்த் உள்பட அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ததில் ரஜினிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் சென்னை திரும்பி வீட்டில் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் மீண்டும் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது

மீண்டும் பரிசோதனை செய்வதற்கு என்ன காரணம்? என்றும் ஒருவேளை அவருக்கு கொரோனா அறிகுறி ஏதேனும் இருந்ததா? என்றும் சந்தேகத்தை ரஜினி ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். ரஜினியின் அடுத்த கட்ட கொரோனா பரிசோதனையின் ரிசல்ட் நாளை வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், வரும் 31 ஆம் தேதி தனது புதிய கட்சி குறித்த அறிக்கவுள்ளார் ரஜினிகாந்த்.  எனவே நாளை மறுநாள் அவர் சென்னை திரும்பவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

ஜனவரி மாதத்தில் ஒரு பத்து நாட்களில் மொத்தப் படப்பிடிப்பையும் முடிக்க நினைத்திருந்த ரஜினிகாந்த், தற்போது கொரோனா பரவல் காரணமாக அண்ணாத்த ஷூட்டிங் தள்ளிப்போகும் என தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்