வெடித்த பட்டாசுக் குழல்களைச் சேகரித்து, மரவெடிகள்… கமல்ஹாசன் டுவீட்

புதன், 18 நவம்பர் 2020 (15:54 IST)
சமீபத்தில் தீபாவளிப் பண்டிகை இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது. அப்போது வெடிக்கப்பட்ட பட்டாசுக் குழல்களைச் சேகரித்து அதில் மரங்கள் வளர்த்து பசுமைக்கு சான்றாக வாழும் வரும் சமூக ஆர்வலருக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :

வீதியில் கிடக்கும் வெடித்த பட்டாசுக் குழல்களைச் சேகரித்து, மரவெடிகளாக மாற்றும் ஹபீஸ் கானின்  சமயோசிதமும் சமூக அக்கறையும் பாராட்டுக்குரியவை. இந்த அசலான பசுமை வெடிகளை வாழ்நாள் முழுக்க வெடிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

வீதியில் கிடக்கும் வெடித்த பட்டாசுக் குழல்களைச் சேகரித்து, மரவெடிகளாக மாற்றும் ஹபீஸ் கானின் சமயோசிதமும் சமூக அக்கறையும் பாராட்டுக்குரியவை. இந்த அசலான பசுமை வெடிகளை வாழ்நாள் முழுக்க வெடிக்கலாம். pic.twitter.com/8vYQzSwkgI

— Kamal Haasan (@ikamalhaasan) November 18, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்