நடிகர் சங்க தேர்தல் வழக்கு: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

வியாழன், 24 செப்டம்பர் 2020 (16:04 IST)
நடிகர் சங்கத்துக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் தேர்தல் நடந்த நிலையில் இந்த தேர்தலை எதிர்த்து நடிகர்கள் சிலர் தொடர்ந்த வழக்கின் விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
 
இந்த வழக்கில் தேர்தலை ரத்து செய்து தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்த நிலையில் இந்த உத்தரவுக்கு தடைவிதிக்க கோரி நடிகர்கள் விஷால், கார்த்தி மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் திடீரென நடிகர் சங்க தேர்தல் வழக்கை விசாரிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வழக்கை வேறு அமர்வு விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற அமர்வு பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது
 
இந்த வழக்கில் இரு தரப்பினரும் நீதிமன்ற யோசனையை ஏற்க மறுத்ததால் உயர் நீதிமன்றம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது
 
முன்னதாக இந்த வழக்கின் விசாரணையின்போது இருதரப்பினர் வாதத்தை கேட்ட நீதிபதி, சட்ட போராட்டம் மூலம் என்ன சாதிக்கப் போகிறார்கள்? என கேள்வி எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்