ரஜினி பட நடிகர் மீது மீண்டும் வழக்குப் பதிவு

சனி, 29 ஏப்ரல் 2023 (16:29 IST)
நடிகர்  நவாசுதீன் சித்திக் மீது மீண்டும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தி சினிமாவின் முன்னணி நடிகர் நவாசுதீன் சித்திக்.இவர், சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

இவர் மீது ஏற்கனவே இவருக்கும் இவரது முன்னாள் மனைவிக்கும் இடையிலான மோதல் விவகாரம்  நீதிமன்றம் வரை சென்றுள்ளது.

இந்த நிலையில், அவர்  மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது, பிரபல குளிர்பான விளம்பரத்தின்  விளம்பர தூதுவராக அவர் நியமிக்கட்டிருக்கும் நிலையில், அந்த விளம்பரத்தில் அவர் நடித்துள்ளது விமர்சனங்கள் எழுந்துள்ளது.

அந்த விளம்பரத்தில், பெங்காலி மக்களின்  நடவடிக்கைகள் அவமதிக்கும் விதமாக இருப்பதாக திவ்ய்யான் முகர்ஜி என்பவ்ர் கொல்கத்தா நீதிமன்றத்தில், வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்