இனிமேல் ஒரே அணி தான்: நடிகர் சங்கத்திற்கு பாரதிராஜா வாழ்த்து

செவ்வாய், 22 மார்ச் 2022 (19:07 IST)
தென்னிந்திய நடிகர் சங்கம் தேர்தலின் போது தான் இரண்டு அணிகள் என்றும் தேர்தலுக்கு பின் ஒரே அணியாக செயல்பட வேண்டும் என்றும் பாரதிராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது
 
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளாக, செயற்குழு உறுப்பினராக பதவி ஏற்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். தேர்தலில் களம் கண்ட இரண்டு அணிகளில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் களத்தில் எதிர் எதிர் துருவங்களாக பணிபுரிந்தாலும் தென்னிந்திய நடிகர் சங்கம் என வரும் போது அனைவரும் ஓரணி தான். இனிவரும் காலங்களில் நடிகர்கள் அனைவருமே பெருமைப்படும் வகையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பணிகள் இருக்க வேண்டும்.
 
நிர்வாகிகள் இல்லாமல் நின்று போன நடிகர் சங்கத்தின் பணிகள் விரைவில் தொடங்க வாழ்த்துக்கள். இன்று தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்கும் நாசர், செயலாளர் விஷால்,  பொருளாளர் கார்த்தி, துணை தலைவர்கள் பூச்சிமுருகன், கருணாஸ் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். இவ்வாறு இயக்குனர் பாரதிராஜா அந்த வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்