தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான அஜித் குமார், தற்போது நடிப்பிலிருந்து தற்காலிகமாக விலகி, தனது கவனத்தை கார் பந்தயங்களில் முழுமையாக செலுத்தி வருகிறார். 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு, சில மாதங்களுக்கு கார் பந்தயங்களிலேயே ஈடுபடப்போவதாக அவர் அறிவித்திருந்தார்.
இது குறித்து அஜித் குமார் ரேஸ் அணி, தங்களின் எக்ஸ் தளப் பதிவில், "எங்கள் அணியின் ஃபேபியன் மற்றும் மேதியூ அடங்கிய குழுவினர், மிகவும் கடினமான இந்த போட்டியில் முதலிடம் பிடித்துள்ளனர். அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்," என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.
முன்னதாக, துபாயில் நடைபெற்ற ஒரு கார் பந்தயத்தில் அஜித்தின் 'அஜித் குமார் ரேஸிங்' அணி மூன்றாவது இடத்தை பிடித்து சாதனை படைத்திருந்தது. மேலும், இத்தாலி மற்றும் பெல்ஜியத்தில் நடந்த போட்டிகளிலும் இந்த பந்தயக் குழு பரிசுகளை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.