ஆனால் அதை இயக்குனர் வெங்கட் மறுத்துள்ளார். இது சம்மந்தமாக சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் பேசியுள்ள அவர் “முதலில் சூர்யா சாருக்கு நான் ஒரு பயோபிக் கதையைதான் கூறினேன். ஆனால் அவர் பயோபிக் கதைகளில் நடிக்க ஆர்வமாக இல்லை. அதன் பின்னர் குடும்பத்தை மையப்படுத்தி ஒரு கதையை சொன்னேன். அது அவருக்கு உடனே பிடித்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு மனித உணர்வுகளைக் கொண்ட ஒரு மகிழ்ச்சியானக் குடும்ப கதையாக இருக்கும். இந்த படத்தில் சூர்யா சாரின் கதாபாத்திரம் சஞ்சய் ராமசாமி போன்ற ஒன்றாக இருக்கும்.” எனக் கூறியுள்ளார்.