படத்துக்குக் கதாநாயகன் தேடும் பா ரஞ்சித்!

வியாழன், 29 ஜூலை 2021 (10:45 IST)
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் படத்தில் இருந்து அசோக் செல்வன் வெளியேறியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கியர் பா.ரஞ்சித். இவர், தற்போது சர்பாட்டா பரம்பரை என்ற படத்தை நடிகர் ஆர்யாவை வைத்து இயக்கியுள்ளார். இந்தப்படம் ஜூலை 22ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் பா. ரஞ்சித்தின் அடுத்தப்பட டைட்டில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. தற்போது அட்டகத்தி ஸ்டைலில் ஒரு காதல் கதை இயக்கப்போகிறாராம். இந்த படத்திற்கு "  “நட்சத்திரம் நகருகிறது”  என டைட்டில் வைத்துள்ளார்.

இரண்டு கதாநாயகன்கள் உள்ள படத்தில் அசோக் செல்வன் ஒரு கதாநாயகனாகவும், காளிதாஸ் ஜெயராம் மற்றொரு கதாபாத்திரத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகினர். ஆனால் இப்போது அசோக் செல்வன் படத்தில் இருந்து வெளியேறவே அவருக்கு பதில் வேறொரு கதாநாயகன் தேடி வருகிறாராம் இயக்குனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்