படப்பிடிப்பின் போது நாகூர் தர்காவுக்கு சென்ற அருண் விஜய்!

புதன், 1 செப்டம்பர் 2021 (16:53 IST)
நடிகர் அருண் விஜய் இப்போது இயக்குனர் ஹரி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

நீண்டநாள் கழித்து இயக்குனர் ஹரி இயக்கும் படத்தில் அவரது மைத்துனரும்,நடிகருமான  அருண்விஜய் நடித்து வருகிறார்.  இப்படம் அருண்விஜய்க்கு 33வது படம். அதேபோல் ஹரிக்கு இந்த படம் 16 வது படமாகும்.  இப்படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார். மேலும், ராதிகா, பிரகாஷ்ராஜ், புகழ், அம்மு அபிராமி, ஜெயபாலன், உள்பட பலர் நடிக்க உள்ளனர். இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக பழனி, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் நடந்த நிலையில் இப்போது நாகூருக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் படப்பிடிப்பு இடைவேளையின் போது அருண் விஜய் நாகூர் தர்காவுக்கு சென்று வழிபட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்