இட்லி கடை தள்ளிப் போனது ஏன்?... நடிகர் அருண் விஜய் கொடுத்த பதில்!

vinoth

செவ்வாய், 1 ஏப்ரல் 2025 (12:22 IST)
பவர் பாண்டி மற்றும் ராயன் ஆகிய படங்களை இயக்கிய தனுஷ் அடுத்து இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தேனி உள்ளிட்ட தனுஷின் சொந்த ஊர்ப் பகுதிகளில் தொடங்கி நடந்தது.  படத்தை டான் பிக்சர் தயாரிக்க, ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக கிரண் கௌஷிக் பணியாற்றுகிறார்.

இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், நித்யா மேனன் மற்றும் அருண் விஜய் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். படத்தின் பெரும்பாலானக் காட்சிகள் தேனி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டது. இன்னும் கடைசி கட்டப் படப்பிடிப்பு டெல்லி மற்றும் பாங்காங் ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட வேண்டியுள்ளது. இதற்கிடையில் தனுஷ் தான் நடிக்கும் இந்தி பட ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார்.

இதனால் ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸாக இருந்த இந்த படம் ஆகஸ்ட் மாதத்துக்குப் பின்னர் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் அருண் விஜய் இட்லி கடை படத்தில் தானும் தனுஷும் இருக்கும் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்தார். அதில் ஒரு ரசிகர் ஏன் ‘இட்லி கடை’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது எனக் கேட்டார். அதற்கு அருண் விஜய் “இன்னும் சில முக்கியமானக் காட்சிகள் படமாக்கப்படவில்லை. மேலும் ஏப்ரல் 10 ஆம் தேதி தல வருகிறார்.” எனப் பதிலளித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்