மீண்டும் தொடங்கிய அருண் விஜய் படத்தின் படப்பிடிப்பு!

செவ்வாய், 8 டிசம்பர் 2020 (11:30 IST)
அருண் விஜய் அறிவழகன் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு கொரோனா லாக்டவுனுக்குப் பின்னர் மீண்டும் தொடங்கியுள்ளது.

அஜித்துடன் ’என்னை அறிந்தால்’ என்ற படத்தில் வில்லனாக நடித்த அருண் விஜய், அந்த படத்தில் கிடைத்த மிகப்பெரிய புகழால் தற்போது தமிழ் திரையுலகில் பிஸியான ஒரு கதாநாயகனாக இருந்து வருகிறார். அவர் தற்போது அக்னி சிறகுகள், பாக்சர் சினம்  மற்றும் இயக்குனர் அறிவழகன் இயக்கும் பெயரிடாத படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார்.

ஈரம் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண்விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு கொரோனாவுக்குப் பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டது. இதுகுறித்து இயக்குனர் அறிவழகனும் நடிகர் அருண் விஜய்யும் டிவீட் செய்துள்ளனர். இந்த இறுதிக்கட்ட படப்பிடிப்போடு மொத்த படமும் முடிகிறது. இந்த படத்துக்கு பார்டர் எனப் பெயரிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்