இந்தியில் கலக்கப் போகும் அரண்மனை 3… டப்பிங்குக்கே இவ்வளவு தொகையா!

வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (17:36 IST)
அரண்மனை 3 படத்தின் இந்தி டப்பிங் உரிமம் 10 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

சுந்தர் சி நடித்த இயக்கிய அரண்மனை மற்றும் ’அரண்மனை 2’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ’அரண்மனை 3’ என்ற திரைப்படத்தை அவர் இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் இந்த.படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் 8 பிரபலங்களால் இன்று வெளியிடப்பட்டது. வெளியான போஸ்டரில் ஆர்யா ஏதோ ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் போலவும் சுந்தர் சி கதையின் நாயகன் போலவும் வடிவமைத்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் போஸ்டர் வடிவமைப்பும் 30 ஆண்டுகளுக்கு முந்தைய ஸ்டைல் போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக அந்த படத்தின் இந்தி டப்பிங் உரிமம் 10 கோடி ரூபாய்க்கு போயுள்ளதாம். இந்த தொகை சினிமா வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்