நூதனமாக ஏமாற்றிய நபர்… உஷாரான ஆண்ட்ரியா!

புதன், 23 செப்டம்பர் 2020 (16:27 IST)
நடிகை ஆண்ட்ரியாவிடம் தயாரிப்பாளர் என அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் ஒருவரைப் பற்றி பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் ஆண்ட்ரியா. சம்பளத்துக்கெல்லாம் ஆசைப்படாமல் நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடிப்பவர் ஆண்ட்ரியா. இந்நிலையில் தன்னை தயாரிப்பாளர் என சொல்லி விஜய் தேவாரகொண்டா நடிக்கும் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க அனுகியுள்ளார்.

அந்த நபரைப் பற்றி சந்தேகமடைந்த ஆண்ட்ரியா, முதலில் கதையை சொல்லுங்கள் எனக் கேட்டுள்ளார். இதைக் கேட்டு ஜெர்க்காகிய அந்த நபர், விரௌவில் இயக்குனரை அனுப்புவதாக சொல்லியுள்ளார். ஆனால் இன்று வரை அந்த இயக்குனர் வரவே இல்லை என சொல்லியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்