இழப்பீடு கொடுக்க ஒத்துக்கொண்ட ஆம்பர் ஹெர்ட்… முடிவுக்கு வரும் ஜானி டெப் வழக்குகள்!

புதன், 21 டிசம்பர் 2022 (08:17 IST)
ஜானி டெப் மற்றும் ஆம்பர் ஹெர்ட் இருவரும் மாறி மாறி மற்றவர் மேல் மான நஷ்ட வழக்கு தொடுத்திருந்தனர்.

நடிகர் ஜானி டெப், பிரபல நடிகையான ஆம்பர் ஹெர்ட்டை திருமணம் செய்துகொண்ட நிலையில், இரண்டு ஆண்டுகள் நல்லபடியாக சென்ற இவர்களது திருமண வாழ்க்கை அதன் பின்னர் விவாகரத்தில் முடிந்தது.

2017ல் இவர்கள் விவாகரத்து செய்துக் கொண்டார்கள். அதன்பின்னர் 2019ல் பத்திரிக்கை ஒன்றிற்கு கட்டுரை எழுதிய ஆம்பர் அந்த கட்டுரையில் ஜானி தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குறிப்பிட்டிருந்தார். மேலும் தான் குடும்பவன்முறையை எதிர்கொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். இது ஜானி டெப் மீது விமர்சனங்களை எழவைத்தது. அதன் காரணமாக அவர் நடித்த பல படங்களில் இருந்து நீக்கப்பட்டார்.

இதனால் அவருக்கு பட வாய்ப்பு குறைந்தது. இதனால் ஆம்பர் ஹெர்ட் தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதாக ஜானி டெப் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணை பல கட்டங்களாக நடந்த நிலையில் தற்போது தீர்ப்பு ஜானிக்கு ஆதரவாக வந்துள்ளது. மேலும் இழப்பீடாக ஆம்பர் ஹெர்ட் 15 மில்லியன் டாலர்கள் கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் நிலுவையில் இது சம்மந்தமான பல வழக்குகளில் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து வழக்கை முடித்துக் கொள்வதாக இப்போது ஆம்பர் ஹெர்ட் நீதிம்னறத்தில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்