பயப்படவே மாட்டேன்! ஆனால் இந்த முறை?... விஜய் படம் குறித்து அட்லீ கருத்து

வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (13:03 IST)
இயக்குனர் அட்லீ, விஜய் உடன் இணைந்து உருவாக்கும் படம் குறித்து சூசகமாக தெரிவித்துள்ளார்.

 
தளபதி விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'சர்கார்' படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்தின் பாடல் காட்சிகள் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்து வருகிறது.
 
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் ராதா ரவி, பழ.கருப்பையா, வரலக்ஷ்மி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துவருகின்றனர். இந்த படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது. 
 
இதையடுத்து ’தெறி’, ‘மெர்சல்’ என இரண்டு பெரும் வெற்றிகளைக் கொடுத்த அட்லீக்கு மீண்டும் தன்னுடைய படத்தை இயக்கும் வாய்ப்பை விஜய் கொடுத்துள்ளார், ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது.
 
இந்நிலையில் ஃஎப்எம் சேனல் ஒன்றின் விருது வழங்கும் விழாவில் அட்லீ பேசும்போது, 'எப்போதுமே பயப்படவே மாட்டேன். ஆனால், இந்த முறை கொஞ்சம் தைரியம், பொறுப்பு அதிகமாகி இருக்கிறது. இதுவரைக்கும் பண்ணாத ஒன்று பண்ணனும் என்று ஓடிக் கொண்டிருக்கிறேன். கதை முடிவாகி, வேலைகள் போய்க் கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் எதிர்பாராத விஷயங்களை எதிர்பாருங்கள். அது எந்த மாதிரியான படம் என்பதெல்லாம் இப்போதைக்குச் சொல்ல முடியாது' என தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்