ரஜினி, அஜித் சேர்ந்து நடிக்க என்கிட்ட கதை இருக்கு… இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் தகவல்!

vinoth

வெள்ளி, 12 ஜூலை 2024 (07:24 IST)
’நேரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி மிகப் பெரிய புகழ்பெற்ற இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அடுத்ததாக ‘பிரேமம்’ என்ற படத்தின் மூலம் நாடு முழுவதும் புகழ் பெற்றார். இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் பேசப்பட்டது. குறிப்பாக தென்னிந்தியாவில் மிகப்பெரிய ஹிட் ஆனது என்பதும், சென்னையில் இந்த திரைப்படம் தொடர்ச்சியாக ஒரு வருடம் ஒரே திரையரங்கில் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆனால் அவ்வளவு பெரிய வெற்றி பெற்ற திரைப்படத்துக்கு பிறகு  8 ஆண்டுகளாக அவர் எந்த படமும் இயக்காமல் கடைசியில் கோல்ட் என்ற படத்தை இயக்கினார். அந்த படம் தோல்வி படமாக அமைந்தது. அதன் பின்னர் அவர் இயக்கிய கிஃப்ட் என்ற திரைப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் “தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்கள் இணைந்து நடித்தால் அந்த படங்கள் பெரிய வரவேற்பைப் பெறும் எனக் கூறியுள்ளார். தளபதி படத்தில் மம்மூட்டியும், ரஜினியும் சேர்ந்து நடித்தது போல இப்போது அவர்கள் சேர்ந்து நடித்தால் அதைவிடப் பல மடங்கு சிறப்பாக இருக்கும். என்னிடம் அஜித்தும், ரஜினியும் சேர்ந்து நடிப்பதற்கு ஏற்ற ஒரு கதை இருக்கிறது. அதே கதையில் கமல் மற்றும் சிம்பு நடித்தாலும் நன்றாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்