பிரேமம் இயக்குனரின் அடுத்த பட அறிவிப்பு: தமிழ் ரசிகர்கள் ஏமாற்றம்

ஞாயிறு, 6 செப்டம்பர் 2020 (20:36 IST)
’நேரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி மிகப் பெரிய புகழ்பெற்ற இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அடுத்ததாக ‘பிரேமம்’ என்ற படத்தின் மூலம் நாடு முழுவதும் புகழ் பெற்றார் இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் பேசப்பட்டது. குறிப்பாக தென்னிந்தியாவில் மிகப்பெரிய ஹிட் ஆனது என்பதும், சென்னையில் இந்த திரைப்படம் தொடர்ச்சியாக ஒரு வருடம் ஒரே திரையரங்கில் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த படத்தின் மூலம் சாய் பல்லவி, மடோனா செபஸ்டியன் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் ரசிகர்கள் மனதில் குடி புகுந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது பிரேமம் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார். ’பாட்டு’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பகத் பாசில் நாயகனாக நடிக்க உள்ளதாகவும் இந்த படம் ஒரு இசை சம்பந்தமான படம் என்றும் அல்போன்ஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த படத்திற்கு அவரே இசை அமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தமிழ் படம் ஒன்றை இயக்க அல்போன்ஸ் புத்திரன் திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் அந்த படம் கைகூடாது போனதால் தான் தற்போது மலையாளத்திலேயே படம் இயக்க உள்ளதாகவும் தெரிகிறது. அல்போன்ஸ் புத்திரன் தமிழ் படம் இயக்குவார் என்று எதிர்பார்ப்புடன் காத்திருந்த தமிழ் ரசிகர்கள் இதனால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்