இந்த நேர்காணலில் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டுள்ள அவர் கரூர் துயர சம்பவம் குறித்தும் பேசியுள்ளார். அதில் “கரூர் சம்பவத்துக்கு அந்த தனிநபர் மட்டும் பொறுப்பல்ல. நம் எல்லோரும்தான் பொறுப்பு. ஊடகங்களுக்கும் இதில் பொறுப்புண்டு. கூட்டம் கூட்டுவதை பெரிய விஷயமாகக் காட்டுவதை நாம் நிறுத்த வேண்டும். விளையாட்டுகளில் கூட்டம் கூடினாலும் இதுபோல இழப்புகள் நடப்பதில்லை. சினிமா சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகள் மற்றும் முதல் நாள் முதல் காட்சி ஆகியவற்றில் மட்டும் ஏன் இப்படி நடக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் நம் திரையுலகை உலகளவில் தவறாகக் காட்டுகின்றன. ரசிகர்களின் அன்புக்காகவே நாங்கள் உழைக்கிறோம். ஆனால் அதற்காக உயிரைப் பணயம் வைக்கக் கூடாது. அன்பைக் காட்ட வேறு வழிகள் உள்ளன.” எனக் கூறியுள்ளார்.