முதல் கட்ட படப்பிடிப்பை முடித்த அர்ஜுன் &ஐஸ்வர்யா ராஜேஷ் திரைப்படம்!

சனி, 9 அக்டோபர் 2021 (15:41 IST)
அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் த்ரில்லர் படத்தின் அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்னர் வெளியானது.

ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்கள் கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் நடித்து வருகிறார் என்பதும் தற்போது வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே . இந்த நிலையில் அர்ஜுன் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் சில வாரங்களுக்கு முன்னர் வெளியானது.

இயக்குனர் தினேஷ் லட்சுமணன் என்பவர் இயக்கும் அதிரடி ஆக்சன் திரைப்படத்தில் அர்ஜுன் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டது.

அதையடுத்து அந்த படத்தின் பூஜை சென்னையில் நடந்தது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்துகொண்டார். அர்ஜுன் சர்வைவர் நிகழ்ச்சி படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருவதால் அவர் பின்னர் படக்குழுவுடன் இணைய உள்ளார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வந்த படக்குழு இப்போது முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளதாம். அர்ஜுன் வந்ததும் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்