மீண்டும் இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய்?

திங்கள், 6 நவம்பர் 2017 (14:06 IST)
‘கத்தி’ படத்தைத் தொடர்ந்து, விஜய் மறுபடியும் இரண்டு வேடங்களில் நடிக்கப் போகிறார் என்கிறார்கள்.



ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘கத்தி’ படத்தில், இரண்டு வேடங்களில் நடித்தார் விஜய். அட்லீ இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘மெர்சல்’ படத்தில் மூன்று வேடங்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிக்க இருக்கும் விஜய், இதிலும் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்கிறார்கள். ‘துப்பாக்கி’ மற்றும் ‘கத்தி’ படங்களைப் போலவே இந்தப் படமும் சமூக அக்கறை மிகுந்ததாக இருக்குமாம்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘ஸ்பைடர்’ படம் தோல்வியைத் தழுவியது. மகேஷ் பாபு நடித்துள்ள இந்தப் படத்தில், ரகுல் ப்ரீத்சிங் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் தோல்வியை, விஜய் படத்தில் சரிக்கட்டும் விதமாக வேலைசெய்து வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.



 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்