4 வருடங்கள் கழித்து மீண்டும் படத்தயாரிப்பில் தனுஷ்!

வெள்ளி, 1 ஜூலை 2022 (21:09 IST)
நான்கு வருடங்களுக்கு பிறகு நடிகர் தனுஷ் மீண்டும் படத் தயாரிப்பில் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன
 
நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் படக்கம்பெனியின் மூலம் கடைசியாக 2018 ஆம் ஆண்டு ’மாரி 2’ என்ற படத்தை தயாரித்தார்.
 
 இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில் அதன் பிறகு படங்கள் தயாரிப்பதை நிறுத்தி விட்டார் 
 
இந்த நிலையில் நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் தனுஷ் 3 படங்களை அடுத்தடுத்து தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது
 
இயக்குனர்கள் வெற்றிமாறன், மாரி செல்வராஜ் மற்றும் எலான் ஆகிய மூன்று இயக்குனர்களின் இயக்கும் படங்களை தயாரிக்க இருப்பதாகவும் இந்த படங்களின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்