அமலாகத்துறை சாட்சியாக மாறுகிறார் பிரபல நடிகை: ரூ200 கோடி மோசடியில் திருப்பம்!

புதன், 22 டிசம்பர் 2021 (15:54 IST)
அமலாகத்துறை சாட்சியாக மாறுகிறார் பிரபல நடிகை: ரூ200 கோடி மோசடியில் திருப்பம்!
ரூ200 கோடி மோசடி செய்த சுரேஷ் சந்திரசேகர் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த வழக்கில் சம்பந்தப்பட்டதாக கூறப்பட்ட நடிகை நோரா பதேஹி என்பவர் அமலாக்கத்துறை சாட்சியாக மாறி இருப்பதாக கூறப்படுகிறது. 
 
தொழிலதிபர்கள் அரசியல்வாதிகள் திரை உலக பிரமுகர்கள் உள்பட பலரை ஏமாற்றி ரூபாய் 200 கோடி மோசடி செய்ததாக சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அவருக்கு நெருக்கமாக பிரபல நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் நோரா பதேஹி ஆகியோர் இருந்ததாக கூறப்பட்டது 
 
இந்த நிலையில் நடிகை நோரா பதேஹி அமலாக்கத்துறை சாட்சியாக ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து சுகேஷ் சந்திரசேகருக்கு தண்டனை கிடைப்பது உறுதி என்று கூறப்படுகிறது 
 
ஆனால் அதே நேரத்தில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் அமலாக்கத்துறை சாட்சியாக மாறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் முற்றுபுள்ளி
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்