சினிமா பத்திரிக்கையாளர்கள் 190 பேருக்கு தலா 1000 ரூபாய் … விஜய் சேதுபதி நிதியுதவி!

செவ்வாய், 1 ஜூன் 2021 (08:42 IST)
நடிகர் விஜய்சேதுபதி தனது உதவும் குணத்துக்காக பெரிதும் பேசப்படுபவர்.

அவர் எப்போதும் சினிமா பத்திரிக்கையாளர்கள் மற்றும் புகைப்படக் காரர்களுடன் மிகவும் நெருக்கமான உறவைப் பேணி வருபவர். இந்நிலையில் இப்போது கொரோனா இரண்டாவது அலைக் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் சினிமா பத்திரிக்கையாளர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு அவர்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்களுக்கு உதவும் விதமாக நடிகர் விஜய் சேதுபதி சுமார் 190 பேருக்கு தலா 1000 ரூபாய் நன்கொடை அளித்துள்ளார். இதை சினிமா பத்திரிக்கையாளர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்