கதையே சொல்லாமல் 35 லட்ச ரூபாயை காலி பண்ணிய இயக்குனர்!

செவ்வாய், 1 ஜூன் 2021 (08:23 IST)
ஈரம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் அறிவழகன் இப்போது அருண் விஜய்யை வைத்து பார்டர் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

ஈரம் மற்றும் குற்ற்ம் 23 ஆகிய படங்களின் மூலமாக கவனம் ஈர்த்தவர் இயக்குனர் அறிவழகன். இதையடுத்து இவரை அழைத்த நயன்தாரா தனக்காக ஒரு கதை கேட்டார். அவரும் முதல்பாதி சொல்லிவிட்டு இரண்டாம் பாதி தயார் செய்துவிட்டு வருகிறேன் என சொல்லியுள்ளார். இதற்காக தயாரிப்பு நிறுவனமும் அவருக்கு பைவ் ஸ்டார் ஓட்டலில் அறை எல்லாம் எடுத்துக்கொடுத்து 6 மாதம் பராமரித்துள்ளது.

ஆனால் அவரால் கதையை முடிக்க முடியவில்லையாம். அதனால் நயன்தாரா அந்த படத்தைக் கைவிட்டு சென்றுள்ளார். இந்த 6 மாத காலமாக இயக்குனர் மற்றும் அவர் குழுவினருக்கு செலவு செய்த தொகை மட்டும் 20 லட்சம் என பில் வந்துள்ளது. அதே போல மற்றொரு தயாரிப்பு நிறுவனமான ஸ்கிரீன் சீன் நிறுவனத்திடம் இதே போல 15 லட்ச ரூபாய் பில் தீட்டியுள்ளார் அறிவழகன். ஆனால் அவர்களுக்கும் கதை சொல்லவில்லை. இப்படியாக மொத்தம் 35 லட்சம் ரூபாய் அவர் காலி செய்ய, இந்த தொகையை திருப்பி செலுத்தினால்தான் அவரின் அடுத்த படம் எந்த பிரச்சனையும் இல்லாமல் ரிலிஸாகுமாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்