நடிகர் சங்கக் கட்டிடம்: ரூ.40 கோடி கடன் பெற தீர்மானம் -விஷால்

ஞாயிறு, 10 செப்டம்பர் 2023 (14:26 IST)
தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்திற்கு ரூ.40 கோடி கடன் பெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது  என்று நடிகர் விஷால்  தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67 வது பொதுக்குழு கூட்டம் இன்று நடிகர் நாசர் தலைமையில்  நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது, அதன்படி இன்று  காலையில் கூட்டம் தொடங்கியது.

சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்க வளாகத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நடிகர் சங்க உறுப்பினர்கள் 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

நடிகர் விஷால் கூறும்போது,

''நடிகர் சங்கக் கட்டடம் கட்டுவதற்காக ரூ.40 கோடி கடன் பெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நடிகர் சங்க தேர்தலில் நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். சங்கத்தின் அடுத்த பொதுக்குழு கூட்டம்  நடிகர் சங்கக் கட்டிடத்தில் நடைபெறும் ''என்று தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் பேசிய நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்க தலைவருமான நாசர்,  ‘’நடிகர் சங்க கட்டிடம் இந்த ஆண்டு நிறைவேறும், தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்திற்கு சட்ட ரீதியாக எந்தத் தடையும் இல்லை….எனவும்,   நடிகர் சங்க கட்டிட கனவு இந்த ஆண்டு நிச்சயமாக நிறைவேறும்’’ என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்