நீங்க பெரிய மனுசன்... சத்யராஜை பாராட்டிய கமல்ஹாசன்...

சனி, 22 ஏப்ரல் 2017 (11:50 IST)
பாகுபலி2 விவகாரத்தில் வருத்தம் தெரிவித்த நடிகர் சத்யராஜை நடிகர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.


 

 
இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் நடிகர்கள் பிரபாஸ், சத்யராஜ், ராணா, நாசர் நடிகைகள் அனுஷ்கா, தமன்னா, ரம்யா  கிருஷ்ணன், ரோஹினி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘பாகுபலி 2' திரைப்படம் வருகிற 28-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
 
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஆந்திரா, தமிழகம் என‌ நாடு முழுவதும் 6 ஆயிரத்துக்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 
 
காவேரி பிரச்சனை தொடர்பாக கடந்த 9 வருடங்களுக்கு முன்பு தமிழ் திரையுலகம் சார்பில் கண்டன ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது கன்னடர்களுக்கு எதிராக நடிகர் சத்யராஜ் பேசியதற்கு இப்போது பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், அவர்  கேட்க மறுத்தால் கர்நாடகாவில் பாகுபலி 2 படம் வெளியிட முடியாது என முன்னதாக கன்னட அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்திருந்தார். 
 
அந்நிலையில், நடிகர் சத்யராஜ் தனது பேச்சு கன்னட மக்களை பாதித்திருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாக கூறினார். எனவே, அந்த போராட்டம் முடிவிற்கு வந்தது. மேலும், கர்நாடகாவில் நடக்கவிருந்த கடையைடைப்பு போராட்டமும் வாபஸ் பெறப்பட்டது. 


 

 
இந்நிலையில், தனது இந்த விவகாரம் பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள கமல்ஹாசன் “வாழ்த்துக்கள் சத்தியராஜ், ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும், பகுத்தறிவாக செயல்பட்டுள்ளீர்கள். விருமாண்டியில் உள்ள வசனம் “மன்னிப்பு கேக்குறவன் பெரியமனுசன்”. நீங்கள் தைரியமான் ஆள்...” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்