தாயாரின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத நடிகர்! வீடியோ பார்த்து கண்ணீர்!

திங்கள், 27 ஏப்ரல் 2020 (13:55 IST)
பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கானின் தாயார் இறந்துவிட அவரின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத நிலையில் சிக்கியுள்ளார் இர்பான் கான்.

பாலிவுட் படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் இர்பான் கான், ஆஸ்கர் விருது வென்ற த லைஃப் ஆப் பை என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததின் மூலம் உலகெங்கும் உள்ள சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதன் பின் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து வந்த கடந்த ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் மீண்டு வந்தார்.

இந்நிலையில் இப்போது லாக்டவுன் காரணாக மும்பையில் உள்ள தனது வீட்டில் முடங்கியிருக்கும் அவரின் தாயார் இறந்துள்ளார். அவர் ஜெய்ப்பூரில் வசித்து வந்துள்ளார். அவரது இறுதிச்சடங்கு நேற்று மாலை நடைபெற்றது. ஊரடங்கு காரணமாக அதில் இர்பான் கானால் கலந்து கொள்ள முடியவில்லை. எனவே அவரது உறவினர்கள் வீடியோ கால் மூலமாக இறுதி சடங்குகளை இர்பான் கானிடம் காட்டியுள்ளனர். அதைப் பார்த்து அடக்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதுள்ளார் இர்பான் கான்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்