சமீபத்தில் வெளியான ரஜினி – லோகேஷ் கூட்டணியின் கூலி படத்தில் தாஹா என்ற கதாபாத்திரத்தில் ஒரு சிறப்புத்தோற்றத்தில் அமீர்கான் நடித்திருந்தார். ஆனால் அந்த கதாபாத்திரம் ரசிகர்களை ஈர்க்கவில்லை. அமீர்கான் ரசிகர்கள் ஏன் இந்த வேடத்தில் அவர் நடித்தார் என சமூகவலைதளங்களில் புலம்பி வந்தனர். இதற்கிடையில் அமீர்கான் மற்றும் லோகேஷ் கூட்டணியில் உருவாக இருந்த ஒரு சூப்பர் ஹீரோ படம் தற்பொது கிடப்பில் போடப்பட்டு விட்டதாக பாலிவிட்டின் முன்னணி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இதுபற்றி தற்போது மேலதிக விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி லோகேஷிடம் அமீர்கான் முழு திரைக்கதையையும் முடித்து இறுதி செய்துவிட்டு அதன் பின்னர் சில மாதங்கள் கழித்துதான் ஷூட்டிங் செல்லவேண்டும் என்ற நிபந்தனையை விதித்ததாகவும், அது சம்மந்தமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்ததால் அந்த படம் கைவிடப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.