ஒரே நாளில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்த பிரபல பாடகியின் வீடியோ

சனி, 27 ஜூன் 2020 (20:38 IST)
தமிழ் சினிமாவில் தனது வசீகரிக்கும் குரலால் ஏராளமான ரசிகர்களைப் பெற்றவர் பாடகி சுசித்ரா.  இவர் சமீபகாலமாக யோகா, சமையல், போன்ற கலைகளில் சமூக வலைதளங்களில்  பக்கம் ஆர்வமாக இருந்தார்.

இந்த நிலையில், தூத்துக்குடியில் உள்ள சாத்தான் குளத்தில் ஜெயராஜ், மற்றும் பென்னிக்ஸ் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் மர்மமான முறையில் மரணம் அடைந்தது இந்தியா முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

இதற்குக் கோலிவுட்டில் இருந்து பாலிவுட் வரை பெரும்பாலானோர் கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் பாடகி சுசித்ரா , சாத்தான் குளம் காவல்நிலையத்தில் இறந்துபோன ஜெய்ராஜ் மற்றும் பென்னிக்ஸை பற்றிப் பேசி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ ஒரே நாளில் 1 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்