தலைநகரில் இசை நிகழ்ச்சி நடத்தும் ஏ.ஆர்.ரஹ்மான்

செவ்வாய், 19 டிசம்பர் 2017 (21:43 IST)
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் இசை நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். படங்களுக்கு இசையமைப்பதில் பிஸியாக இருந்தாலும், அவ்வப்போது இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். 
 
ரஜினியின் ‘2.0’, ராஜிவ் மேனனின் ‘சர்வம் தாளமயம்’ உள்பட தமிழ், மலையாளம், ஹிந்திப் படங்களுக்கும் தற்போது இசையமைத்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள கச்சிபோலி ஸ்டேடியத்தில் இசை நிகழ்ச்சி நடத்தினார் ஏ.ஆர்.ரஹ்மான். 
 
‘என்கோர்’ என்ற அந்த இசை நிகழ்ச்சியை, எம் டி.வி.யுடன் இணைந்து வழங்கினார். 3 மணி நேரம் இந்த இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, வருகிற 23ஆம் தேதி டெல்லியில் இசை நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார். அதன்பிறகு ஆந்திர அரசு சார்பில் காக்கிநாடாவிலும் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்