இந்நிலையில் இப்போது சண்முகபாண்டியன் காட்டையும் யானைகளையும் பின்னணியாகக் கொண்ட படை தலைவன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை வால்டர் மற்றும் ரேக்ளா ஆகிய படங்களை இயக்கிய அன்பு இயக்கியுள்ளார். படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். மே 23 ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் நடந்தது. அதில் கலந்துகொண்ட இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் பேசும் போது “காக்கிச் சட்டையிலும், கதர் சட்டையிலும் விஜயகாந்த் சார் போன்ற ஒரு அழகனைப் பார்த்ததில்லை. அவரின் கண்கள் சக்தி வாய்ந்தவை. இப்போது அதே போன்ற கண்களை நான் சண்முக பாண்டியனிடம் பார்க்கிறேன். வளர்ந்து வாங்க நாம ரமணா 2 பண்ணுவோம்” எனக் கூறியுள்ளார். படை தலைவன் படத்தில் விஜயகாந்த் A I தொழில் நுட்பம் மூலமாக உருவாக்கப்பட்டுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.