75 வது சுதந்திர தினத்தில் ஒரு இசைத் திருவிழா!

திங்கள், 18 ஜூலை 2022 (19:00 IST)
இந்திய சுதந்திர தினத்தை ஒரு இசைத் திருவிழாவாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

வரு ஆகஸ்ர்ட் 15 ஆம் தேதி இந்தியாவில் 75 வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ளது. இதைச் சிறப்பிக்கும் வகையில்,சென்னையிலுள்ள சாதகப் பறவைகள் இணைந்து ஒரு இசைத்திருவிழாவாகக் கொண்டாட்ட திட்டமிட்டுள்ளனர்.

இதில், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் திரைத்துறையினர் பங்களிப்பு பற்றிய ஒரு அருங்காட்சி அமையவுள்ளது.

இதுகுறித்து இந்த அமைப்பினர் கூறியுள்ளதாவது: முதன் முறையாக 75 பாடகியர் ஒரே மேடையில் இணைந்து பாடவுள்ளனர்.

மேலும், இதன்  வாயிலாகக் கிடைக்கும்  நிதியை யுனைட்டர் சேரிட்டபிள் டிரஸ்ட் அமைப்பிற்கு கொடுக்கவுள்ளதாகவும், இந்த விழாவில்,விளையாட்டுத்துறையில் சாதனை படைத்தவரகளுக்கு விருது வழங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்