திரையரங்குகளில் 100% பார்வையாளர்கள் எப்போது? புதிய தகவல்

செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (15:57 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் இதனையடுத்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் சமீபத்தில் தமிழகம் உட்பட தென்னிந்திய மாநிலங்களில் திரையரங்குகள் திறக்கும் திறக்கப்பட்டன என்பதும் ஆனால் அதே நேரத்தில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் தற்போது ஆந்திராவில் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து அம்மாநிலத்தில் செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்படும் என செய்திகள் வெளியாகி உள்ளது
 
ஆந்திராவை அடுத்து தமிழகத்திலும் விரைவில் 100 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்