இலங்கையில் சில தினங்களுக்கு முன்பு, நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில், இலங்கை சுதந்திரா கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனதா விமுக்தி பெரமுனா உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் களத்தில் குதித்தன. கடும் போட்டி நிலவியது. வாக்குப்பதிவு முடிந்து, பதிவான வாக்குகள் நேற்று முன் தினம் எண்ணப்பட்டன. இதில், ரனில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய முன்னணி 106 இடங்களில் அபார வெற்றி பெற்றது.