60 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரிதாக இந்து மக்களால் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகையும், முஸ்லிம்கள் கொண்டாடும் பண்டிகையும் ஒரே நாளில், அதாவது மார்ச் 14ஆம் தேதி வருகிறது. இதனை அடுத்து, உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சம்பல் பகுதியில் ஜும்மா மசூதி உள்பட 10 மசூதிகளை தார்பாயால் மூட வேண்டும் என காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
எந்தவித குழப்பமும் பதட்டமும் இரு சமூகங்களுக்கு இடையே ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் சம்பந்தப்பட்ட 10 மசூதிகள் தார்பாயால் மூடி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும், இது பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள வழக்கமான ஒன்றுதான் என்றும் அவர் கூறியுள்ளார்.