மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்ற அயர்லாந்து எடுத்த அதிரடி முடிவு..!

திங்கள், 13 பிப்ரவரி 2023 (19:06 IST)
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்ற அயர்லாந்து எடுத்த அதிரடி முடிவு..!
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
இன்றைய முதலாவது போட்டியில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங் செய்ய முடிவெடுத்ததை அடுத்து அந்த அணியின் வீராங்கனைகள் களமிறங்கியுள்ளனர். 
 
சற்றுமுன் வரை அயர்லாந்து அணி 6 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 43 ரன்கள் எடுத்துள்ளது. இன்றைய அடுத்த போட்டி தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்