அந்த பெண் தனது புகாரில், யாஷ் தயாலுடன் தான் ஐந்து வருடங்களாக உறவில் இருந்ததாகவும், இந்த உறவின் மூலம் அவர் தன்னை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சுரண்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த உறவின் போது தயால் தன்னிடம் பணம் வாங்கியதாகவும், இதுபோன்று கடந்த காலத்திலும் பல பெண்களிடம் அவர் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக சாட் பதிவுகள், ஸ்கிரீன்ஷாட்டுகள், வீடியோ அழைப்புகள் மற்றும் புகைப்படங்கள் இருப்பதாகவும் அந்தப் பெண் கூறியுள்ளார்.