உலகக் கோப்பை டி-20: இலங்கையை வீழ்த்திய ஆஸ்திரேலியா அணி!

செவ்வாய், 25 அக்டோபர் 2022 (20:18 IST)
உலக கோப்பை டி20 கிரிக்கெட்  இன்றைய போட்டியில் இலங்கை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்ற பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து முதலில்  இலங்கை அணி  பேட்டிங் செய்த நிலையில் இலங்கை அணியின் பதுன் நிஷாங்கா 40 ரன்களும், அசலாங்கா 38 ரன்களும், தனஞ்செய  26 ரன்களும் எடுத்தனர். எனவே அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு 158 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இந்த நிலையில் 158 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் ,மார்கஸ் ஸ்டாலோனிஸ் 59 ரன்களும், ஆரோன் பின்ச் 31 ரன்களும், மேக்ஸ் வெல் 23 ரன் களும் எடுத்தனர்.எனவே 16.3 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்