50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்: சென்னையில் மட்டும் 5 போட்டிகள்..!

செவ்வாய், 27 ஜூன் 2023 (13:00 IST)
இந்தியாவில் வரும் மாட்டோபர் மாதம் தொடங்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை சற்றுமுன் வெளியானது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்த அட்டவணையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மட்டும் மொத்தம் ஐந்து போட்டிகள் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி மோதும் அக்டோபர் 8ஆம் தேதி போட்டி, நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிமோதும் அக்டோபர் 14ஆம் தேதிக்கான போட்டி, நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் மோதும் அக்டோபர் 14ஆம் தேதிக்கான போட்டி, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் மோதும் அக்டோபர் 23ஆம் தேதிக்கான போட்டி மற்றும் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் அக்டோபர் அக்டோபர் 27ஆம் தேதிக்கான போட்டி ஆகிய போட்டிகள் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் முதல் அரையிறுதி மும்பையில் மைதானத்திலும் இரண்டாவது அரையிறுதி  கொல்கத்தா மைதானத்திலும் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்திலும் நடைபெற உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி மற்றும் இறுதி போட்டி ஆகிய இரண்டுமே அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்