374 ரன்கள் அடித்தும் சூப்பர் ஓவர்! பரிதாபமாக தோல்வி அடைந்த மே.இ.தீவுகள் அணி..!

செவ்வாய், 27 ஜூன் 2023 (07:47 IST)
உலகக்கோப்பை தகுதி சுற்றில் 374 ரன்கள் அடித்த மேற்கிந்திய தீவுகள் அணி சூப்பர் ஓவரை சந்தித்த நிலையில் சூப்பர் ஓவரில் பரிதாபமாக தோல்வி அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களாக உலகக்கோப்பை தகுதிப்போட்டிகள் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நேற்றைய தகுதி போட்டியில் மேற்கிந்த தீவுகள் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதினார்.
 
இதில் முதலில் பேட்டிங் செய்த மேற்கின் தீர்வுகள் அணி 50 ஓவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 374 ரன்கள் எடுத்தது. நிக்கோலஸ் பூரன் அபாரமாக விளையாடிய சதம் அடித்தார் 
 
இந்த நிலையில் 375 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நெதர்லாந்து அணி 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 374 ரன்கள் அடித்தது. இதனை அடுத்து சூப்பர் ஓவர் விளையாடப்பட்டது 
 
சூப்பர் ஓவரில் நெதர்லாந்து அணி 30 ரன்கள் எடுத்தது. ஆனால் மேற்கிந்திய தீவுகள் அணி 8 ரன்கள் எடுத்த போது இரண்டு விக்கெட்டுகளை இழந்ததால் அந்த அணி பரிதாபமாக தோல்வி அடைந்தது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்