மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: மே.இ.தீவுகள், நியூசிலாந்து அணிகள் வெற்றி..!

திங்கள், 20 பிப்ரவரி 2023 (07:57 IST)
கடந்த சில நாட்களாக மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் மேற்கு இந்திய தீவுகள் அணியும் மற்றும் நியூசிலாந்து அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
 
நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய நிலையில் முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்தது.
 
இதனை அடுத்து 117 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் மட்டுமே எடுத்ததால் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது. 
 
அதேபோல் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. ஆனால் இலங்கை அணிபாடு மோசமாக விளையாடி 60 ரன்களுக்கு ஆட்டம் இழந்ததை அடுத்து நியூசிலாந்து அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்று இந்தியா மற்றும் அயர்லாந்து அணி இடையிலான போட்டி நடைபெற உள்ளது என்பதும் இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்